என் முதல் காதல்

என் பள்ளி காலத்தில்
வந்தது முதல் காதல்
அவளின் ஒரு நிமிட பார்வைக்கு
அடிமையாகி போனேன்
என் முகம் பார்த்து பின் முதுகு
துளைத்துப்போனது உன் பார்வை
ஈட்டியோ என்று இருந்தேன்
இல்லை அது நங்கூரம் என்று
என் நெஞ்கில் பாய்ச்சி விட்டு போனாள்
அடுத்த ஆண்டு பள்ளித்திறப்பில்
ஆவலோடு எதிர் பார்த்தேன் உன்னை
ம்ம் நேற்று வரை வரவில்லை நீ
இருபது வருடம் போனபின்பு
கண்டேன் உன்னை
உன் பிள்ளைகளுடன்
எங்கே அந்த கண்கள்
எங்கோ வெறித்த பார்வையில்
எத்தனையோ சோகங்கள்
உன் கண்கள் கண்டு
கலங்கின என் கண்கள்
இறைவா இவள் கண்களில் உயிர் கொடு.
இவள் வாழ்வில் ஒளி கொடு
என் கனவே நீதான்..!
அன்பானவளே..!

எறும்பு ஊர கல்லும்
தேயுமா என்பது தெரியாது
உன் மனக்கல் மீது யார்
ஊர்ந்தாலும்
அவர்கள்தான் தேய்வார்கள்
என்பது மட்டும் தெரியும்
*
என் கவிதைகளின் எழுத்துப்
பிழைகளை நீ சரி செய்வதைவிட
மிக அழகு உன் உடையை நீ
சரி செய்வது
*
நீ
ஆசைபட்டபொருட்கள்
எல்லாவற்றையும்
வாங்கி பத்திரமாய்
வைத்திருக்கிறேன்
பத்திரப் படுத்தியதற்காகவாவது
என் மேல் உனக்கு ஆசை
வந்துவிடும் என்ற நம்பிக்கையில்
*
குழந்தையை தூக்கி கொஞ்சுகிறாய்
குழந்தையோ உன்னைக் கொஞ்சுகிறது
குழந்தை நீ தூக்கியதற்காய்
*
பூ
செடியை
சுற்றுமா என்ன..?
நீ
துளசிச் செடியை
சுற்றும்போது
என்னை நானே
கிள்ளிப் பார்க்கிறேன்
Subscribe to:
Posts (Atom)

